கடந்த 24 மணித்தியாலத்தில் (23.05.2020) மட்டும் புதியதாக 1732 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் பொது சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதே நேரம் மீண்டும் 2 வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் இன்று மரணித்துள்ளார். மரண எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று மட்டும் 16 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் எண்ணிக்கையையும் சேர்த்து மொத்தமாக 177 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.